
Guru Ramana Vachana Malai(Tamil)
திருவண்ணாமலையின் அடியில் எழுந்தருளியிருக்கும் ஆத்மஞானியும் பரமகுருவும் ஆகிய ஸ்ரீரமணபகவானது அடியார்களில் மிகச் சிறந்தவரான ஸ்ரீமுகவைக் கண்ண முருகனார் என்பார் தமது குருநாதரது உபதேச வசனங்களைத் தமிழ் வெண்பாக்களாகச் செய்து வந்தார்; அவற்றை மற்றொரு அடியார் ஸ்ரீரமணபாதாநந்தர் அச்சிட்டு வெளியிட்டுதவினார். அது 'பரமார்த்த தீபம் என்னும் குருவாசகக் கோவை' என்று பெயர்கொண்டு விளங்குகிறது.
அந்நூலில் சுமார் முந்நூறு செய்யுட்களின் வடமொழி மொழிபெயர்ப்பையும் ஸ்ரீரமணபாதாநந்தர் அச்சிட்டு உதவியிருக்கிறார்.
இவ்வடமொழி நூலுக்கு உதவியாக, இதன் சுலோகங்களின் மொழிபெயர்ப்பாக இந்நூல் அந்தது. இது மிகவும் எளிய நடையிலிருப்பதால், முதல் நூலைப் படிப்பதற்குப் போதிய செந்தமிழ்ப் பயிற்சி இல்லாதவருக்கும் உதவலாம்.
வடமொழி நூலில் சுமார் 50 சுலோகங்கள் புதியனவாக எழுதப்பட்டன; அவற்றின் மொழிபெயர்ப்புகளின் எண்கள், நூலின் முன் வைத்திருக்கும் எண்களின் அட்டவணையில் காணப்படமாட்டா.
இந்நூல் பெரும்பாலும் பகவானது அடியார்களின் பொருட்டே ஆகும்; அவர்களுக்கு இவ்வித நூல் இன்றியமையாதது அல்ல, என்றாலும், பகவானது அருள் வசனங்களடங்கிய இந்நூலைப் படிக்க அவா உறுவர்.
மற்றவர் இந்நூலைப் படிக்க நேருமாயின், இதனால் பகவானது உண்மையை ஒருவாறு உணர்ந்து அவரது திருவடிகளில் அன்புகொள்ளுவாராகில் அவர்களும் பாக்கியவான்களே.
pp.112